தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றது.

தேர்தல் ஆரம்பமான முதல் நான்கு மணி நேரங்களுக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 சதவீத வாக்குகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் தலா 20 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அவ்வந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.