340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ளது.
இருப்பினும் வேட்புமனு தொடர்பில் நிலவும் பிரச்சனை காரணமாக மேல்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவின் அடிப்படையில் எல்பிட்டிய பிரதேசசபைக்கான வாக்களிப்பு மட்டும் நாளை இடம்பெறாது.
தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டபின்னர் முதலாவது வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.