உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு!

அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் மற்றும் விஞ்ஞான பீடங்கள் என்பன மீண்டும் திங்கட்கிழமை திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும் 2 விஞ்ஞான பீடங்களும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.