முள்ளிவாய்க்காலில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் யுத்த கால வெடிபொருட்கள் இன்னும் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

இவ்வாறு பல இடங்களில் வெடிபொருட்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டதுடன் இன்றும் சில இடங்களில் வெடிபொருட்கள் கிடப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது

இவை உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டு அகற்றுவதற்க்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகிறது

இருப்பினும் யுத்தம் முடிந்து வெடிபொருள் அகற்றப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டும் இன்று 8 வருடங்கள் கடந்தும் பல்வேறு வெடிபொருட்கள் தொடர்ச்சியாக காணப்படுவது மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்ப்படுத்தியுள்ளது