தம்புத்தேகமவில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு!

தம்புத்தேகமவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு வயதுச் சிறுவன் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

தம்புத்தேகம – கல்னேவ வீதியில் திஸ்பனேபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் சிறிய ரக லொறி ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரே உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஏழு வயதுச் சிறுவன் உட்பட நால்வர் உயிரிழந்ததாகவும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.