பொதுமன்னிப்பில் 544 பேர் விடுதலை

70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 544 சிறைக்கைதிகள் இன்று விடுதலைசெய்யப்பட்டனர்.

இவர்களுள் 6 பெண்களும் உள்ளடங்கியுள்ளனர்.

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுள் 56 பேர் நீர்கொழும்பு ,வெலிக்கடையில் 28 ,மஹரவில் 46 பேரும் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்கள் தண்டப்பணம் செலுத்த முடியாத சிறைக்கைதிகளுக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.