நெல்லியடி பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது மீசாலை புத்தூர் சந்தி பகுதியில் வைத்து வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று இரவு 7:00 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரான 24 வயதுடைய யோ.தர்சினி என்பவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்ப பிரச்சனையே இத் தாக்குதலுக்கு காரணம் என கண்டறிந்துள்ளனர்.