வடக்கின் சில பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(26) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், நாளை வெள்ளிக்கிழமை(26) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய இலங்கை மின்சார சபையின் சேவைக்குட்பட்ட கிளிநொச்சிப் பிரதேசத்தில் வற்றாப்பளை, முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை, மாஞ்சோலை வைத்தியசாலை, முல்லைத்தீவு விமானப்படை- 1 மற்றும்-2, முல்லைத்தீவு 59 ஆவது படைப்பிரிவு (14ESR-01 மற்றும் 14ESR-01-2), SFHQ வற்றாப்பளை, குமுழமுனை பல நோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை, 12 VIR இராணுவ முகாம், 16 ESR இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும்,

காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் ஆசிக்குளம்., சிதம்பரபுரம், கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்ப மருதங்ககுளம், பெரியகூமரசஙகுளம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.