ஊவா மாகாண சபை கட்டடத் தொகுதிக்குள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில் இணைந்துகொண்ட கணேஷமூர்த்தி, மாகாண சபைக்குள் இன்று பிரவேசித்ததை அடுத்து, சிலர் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதனால் ஊவா மாகாண சபை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.