நன்றாகத் தும்முங்கள்

மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுக்கள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும் பொழுது நம் நுரையீரல் பயப்படும். உடனே நுரையீரல் நம் உடலில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குள்ளே ஒரு நாற்பது தூசுக்கள் வந்து விட்டன. இதனால் எனக்கு ஆபத்து எனவே இதை வெளியேற்ற வேண்டும் என்று கேட்கும். நமது உடலில் உள்ள மருத்துவர் உடனே தும்மல் சுரப்பி என்ற ஹிஸ்டமைன் சுரப்பியிடம் அந்த வேலையை கொடுப்பார். தும்மல் சுரப்பி நுரையீரலுக்குச் சென்று ஆராய்ச்சி செய்வார்.
இங்கே நாற்பது தூசுக்கள் உள்ளன. எனவே ஒரு நாலு தும்மல் மூலமாக இந்த தூசுகளை வெளியேற்றலாம் என்று முடிவு செய்து தும்மலுக்குத் தேவையான சக்தியை உடலிலிருந்து பெற்று காற்று தேவையான அளவு எடுத்து தும்மல் வரும் பொழுது அதில் நீர்த் துளிகள் வரும்.
எனவே உடலில் உள்ள தும்மலுக்குத் தேவையான நீரை உறிஞ்சி நமக்கு தெரியாமல் நம்மை மீறி நான்கு முறை காற்றுடன் தண்ணீரைக் கொண்டு அந்த நாற்பது தூசுகளையும் வேகமாக நுரையீரலிலிருந்து வெளியேற்றும் ஒரு அற்புதமான கழிவு நீக்கம் என்ற வேலை தான் தும்மல்.
தும்மல் என்பது நமது கட்டுப்பாட்டில் கிடையாது. நம்மை மீறி திடீரென வருகிறது. எனவே தும்மல் என்பது ஒரு நோய் கிடையாது. தும்மல் நம் உடல் பார்க்கும் வைத்தியம். ஆனால் நாம் தும்மல் வரும் பொழுது அதை அடக்க நினைக்கிறோம்.
சிலர் அலுவலகத்திலோ கூட்டத்திலோ இருக்கும் பொழுது தும்மல் வராமல் அடக்குகிறோம். இப்படி தும்மல் வரும்பொழுது அடக்கினால் அதற்கு பெயர் தான் நோய், சிலர் தும்மல் வரும் பொழுது அதை நிறுத்துவதற்கு தைலம் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
தும்மல் வரும்பொழுது தைலம் பயன்படுத்தினால் என்ன நடக்கும் ? தைலத்தின் வாசம் உடலுக்குள் புகுந்து தும்மல் சுரப்பியை வேலை செய்யாமல் இருக்குமாறு கட்டளையிடும் . நமது உடலிலுள்ள கழிவை வெளியே வீசும் மருத்துவம் செய்யும் தும்மல் சுரப்பியை வேலை செய்ய வேண்டாம் என்று தடுப்பது நமது உடலுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.
இப்படி தைலத்தின் வாசம் இருக்கும் வரை நமக்கு தும்மல் வராது . நாம் நினைத்துக் கொள்கிறோம். கண்டிப்பாக கிடையாது. நீங்கள் கழிவை வெளியேற்றும் ஒரு செயலை நிறுத்தி விட்டீர்கள். சுமார் நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு இந்த தைலத்தின் வாசம் இருக்கும் வரை தும்மல் சுரப்பி சுரக்காது.
ஏற்கனவே நாற்பது தூசுக்கள் உள்ளே சென்ற நிலையில் தும்மல் சுரப்பி சுரக்காவிட்டால் இந்த ஐந்து மணி நேரத்தில் நாலாயிரம் தூசுகள் நம் நுரையீரலுக்குள் புகுந்து விடும். எனவே தும்மல் வரும் பொழுது அதை நிறுத்துவதற்கு எந்த வைத்தியமும் செய்யக் கூடாது.
நாம் இருக்கும் இடத்தில் காற்றில் காற்று கெட்டு விட்டது என்று புரிந்து நாம் அந்த இடத்தை விட்டு வெளியே வர வேண்டும் அல்லது காற்றாடி போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும் . அல்லது முகத்தில் துணியை கட்டிக் கொள்ள வேண்டும்.
இப்படி காற்றை சுத்தம் செய்வதைப் பற்றித் தான் யோசிக்க வேண்டுமே தவிர தும்மலை நிறுத்துவதற்கு முயற்சி செய்யக் கூடாது . எனவே தும்மல் என்பது ஒரு நோயே கிடையாது.