வவுனியா தாண்டிக்குளம் சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது கன்டர் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் வாழைக்குலைகள் கொண்டுசென்ற வேளையிலேயே இன்று (செவ்வாயக்கிழமை) காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.