கிளிநொச்சி தர்மபுரம் காவற்துறை நிலையத்திற்குள் வைத்து நஞ்சு அருந்திய பெண் காவற்துறை உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் காவற்துறை நிலைய வட்டாரங்களை வினவிய பொழுது அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பதனை உறுதிப்படுத்தி உள்ளனர். காவற்துறை நிலையத்தில் வேலை செய்கின்ற பெண் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவருடைய கணவன் பகல் அவருடன் வந்து உரையாடியதாகவும் திடீரென அவர் நஞ்சு அருந்திவிட்டதாகவும் அவரை கிளிநொச்சி வைத்திய சாலையில் சேர்த்திருப்பதாகவும் இதற்கு குடும்பத்தகறாரே காரணம் எனவும் தெரிவித்தனர்