முகநூல் நட்பால் பல இலட்சம் ரூபாவை இழந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஆயுள்வேத பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவி ஒருவரே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 7 இலட்சத்து 75 ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவியுடன் முகநூல் ஊடாக நட்புறவை ஏற்படுத்தி பெரியளவு பரிசு பெற்றுக் கொள்ள முடியும் என்று மோசடியாளர் தெரிவித்துள்ளார். அதனை நம்பி ஏமாந்த பெண் மோசடியாளரின் வங்கிக் கணக்கில் 7 இலட்சத்து 75 ரூபா பணத்தை வைப்பிட்டுள்ளார்.
கடந்த 3ஆம் திகதி பரிசு கிடைக்கும் என்று தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட நபர் குறிப்பிட்டுள்ளார். பரிசு வந்து சேராமையால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை மாணவி அறிந்துள்ளார். இது தொடர்பில் கும்புருபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.