எம்.ஜி.ஆரின் 101 ஆவது பிறந்ததின நிகழ்வு

கல்வியங்காடு எம்.ஜீ.ஆர்.முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆரின் 101 ஆவது பிறந்த தின நிகழ்வு இம்மாதம் 17 ஆம் திகதி  புதன்கிழமை காலை 8 மணிக்கு கல்வியங்காடு சந்தியில் அமைந்துள்ள சிலையடியில் இடம்பெறவுள்ளது.

ஈழத்து எம்.ஜீ.ஆர். என அழைக்கப்படும் இ.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள  இந் நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜன் பிரதம அதிதியாக கலந்து  சிறப்பிக்கவுள்ளார்

மேலும்,  வறுமைக்கோட்டுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  உடுபிடவைகள் என்பனவும்  ஈழத்து  எம் .ஜி .ஆர் இனால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.