கிளிநொச்சி இரணைமடு சந்தி பகுதியில் இன்று அதிகாலை 4மணியளவில் விபத்து. டிப்பர் சாரதி ஸ்தலத்தில் பலி.

கிளிநொச்சி இரணைமடு சந்தி பகுதியில் இன்று அதிகாலை 4மணியளவில் விபத்து. டிப்பர் சாரதி ஸ்தலத்தில் பலி.

கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் 2 ரிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பகுதியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ் நோக்கிப் பயணித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

முன்னே சென்ற ரிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியமையால் பின்னால் மணல் ஏற்றிச் சென்ற மற்றய ரிப்பர் பின்னால் மோதியுள்ளது. இதன்போதே பின்னால் வாகனத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சாரதியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.