கடவத்தை கொலையில் பலியானவரின் முன்னாள் மனைவி உட்பட நால்வர் கைது

கடவத்தை – ரன்முதுகல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் வசம் இருந்து கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை கொலையான நபரின் முதல் மனைவி உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.