நீர்வேலிப் பகுதியில் வீதி விபத்தில் காயமடைந்தவர் மரணம்!

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் ஹைஏஸ் வானும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியிருந்தன. குறித்த விபத்தில் 6 வயது சிறுமி மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அதில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த துரைசிங்கம் (வயது 65) என்பவர் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார்.