யாழ். குடாநாட்டில் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவோர் அதிகரிப்பு!

முதி­யோர் இல்­லங்­க­ளில் சேர்க்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துள்­ளது. கைதடி அரச முதி­யோர் இல்­லத்­தில் கடந்த ஆண்­டில் மட்­டும் 78 முதி­ய­வர்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் கூடு­த­லா­னோர் ஆண்­கள் என இல்ல அத்­தி­யட்­ச­கர் த.கிரு­பா­க­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஆண் முதி­ய­வர்­கள் 44பேரும் பெண் முதி­ய­வர்­கள் 34பேரும் கடந்த ஆண்­டில் இல்­லத்­தில் இணைக்­கப்பட்­ட­னர். கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்­கம் 2017ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் சேர்க்­கப்­பட்ட முதி­ய­வர்­க­ளின் எண்­ணிக்­கையை ஒப்­பிட்டு பார்க்­கும்­போது கடந்த ஆண்­டில்­தான் அதிகள­வான முதி­ய­வர்­கள் இல்­லத்­தில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

குறிப்­பாக 2012ஆம் ஆண்­டில் 24 ஆண் முதி­ய­வர்­கள் 19 பெண் முதி­ய­வர்­கள் என 44 பேரும், 2013ஆம் ஆண்­டில் 24 ஆண் முதி­ய­வர்­கள் 19 பெண் முதி­ய­வர்­கள் என 44பேரும் 2014ஆம் ஆண்­டில் 32 ஆண் முதி­ய­வர்­கள் 16 பெண் முதி­ய­வர்­கள் என 48பேரும் 2015ஆம் ஆண்­டில் 18 ஆண் முதி­ய­வர்­கள் 23 பெண் முதி­ய­வர்­கள் என 41பேரும் 2016ஆம் ஆண்­டில் 37ஆண் முதி­ய­வர்­கள் 17பெண் முதிய வர்­கள் என 54பேரும் சேர்க்­கப்­பட்­ட­னர்.

தற்­போது இல்­லத்­தில் கிட்­டத்­தட்ட 220 முதி­ய­வர்­கள் தங்­கி­யுள்­ள­னர். இதில் 123 ஆண் முதி­ய­வர்­க­ளும் 97 பெண் முதி­ய­வர்­க­ளும் உள்­ள­னர். முதி­ய­வர்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் சேர்க்­கப்­பட்டு வரு­வ­தால் இல்­லத்­தில் இட நெருக்­கடி ஏற்­ப­டும் நிலை தோன்­றி­யுள்­ள­து–­என்­றார். வடக்­கில் ஒரே ஒரு அரச முதி­யோர் இல்­ல­மாக கைதடி முதி­யோர் இல்­லம் செயற்­பட்டு வரு­கின்­றமை குறிப்பிடத்தக்கதாகும்.