நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா!

திருவெம்பாவை நிறைவு நாளான(02.01.2018) திருவாதிரை நாளில் நல்லூர் சிவன் கோயிலில் அதிகாலை முதல் கூத்தப்பெருமானுக்கு பல வகை திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடைபெற்று ஆருத்ரா தரிசனமாக திருநடனக்காட்சியும் திருத்தேர்பவனியும் இடம்பெற்றது.
ஈழத்தில் திருவெம்பாவைக்காலத்தில் கொடியேறும் சிவாலயமாக பரிணமித்துள்ள நல்லூர் சிவாலயத்தில் பெருமானின் ஆருத்ரா தரிசன முத்தேர் பவனியில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்