நீர்வேலியில் கோர விபத்து -சிறுமி உட்பட இருவர் பலி!


யாழ்ப்பாணம் நீர்வேலி பிரதான வீதியில்  இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி மற்றும் ஹயேர்ஸ் ரக வேன’  ஆகியன நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த அனர்த்தம் இன்று(2) மாலை  நிகழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த சிறுமியும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.