A/L பெறுபேற்றில் அதிருப்தி மாணவி தற்கொலை முயற்சி – யாழில் சம்பவம்!

நேற்று வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் தான் எதிர்பார்த்த சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில்
வடமராட்சி பாடசாலை மாணவி ஒருவர் தப்பமான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
2017 உயர்தர வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவியே பெப்சி சோடாவுக்குள் நஞ்சு கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மாணவியை உடனடியாகவே மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் உறவினர்கள் சேர்த்தனர்.
சோடாவுக்குள் கலந்து நஞ்சு அருந்தியமையால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.