யாழ்.இந்துக் கல்லூரி சாதனை: 20 மாணவர்கள் 3A சித்தி!

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதில் 20 மாணவர்களுக்கு 3A சித்தி பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.
கணிதப் பிரிவில் 10 மாணவர்கயும், உயிரியல் பிரிவில் 4 மாணவர்களும், வணிகப் பிரிவில் 6 மாணவர்களும் 3A சித்தி பெற்று சாதித்துள்ளனர்.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்த நிலையில், தனியார் பரீட்சார்த்திகள் 77 ஆயிரத்து 284 பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.