நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும்

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் நீதிமன்றத்தில் தமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் தற்பொழுது தீர்மானம் எடுத்து முடிந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.