கொழும்பில் பொலிஸார் குவிப்பு

கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி புறக்கோட்டை, கோட்டை பகுதிகளுக்கு இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெளியிடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பொலிஸார் இவ்வாறு பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் சிவில் உடையிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் மற்றும் திருடர்களிடம் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு கொழும்பு நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு