யாழ். மதுபான நிலையத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு (படங்கள்)

யாழ். இராசாவின் தோட்ட வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்கான யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பல் யாழ். பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.