மலசலகூடக் குழியில் ரவைகள் மீட்பு

அச்வேலிப் பகுதியில் மலசலகூடக் குழி ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக பாவனைக்குட்படுத்தப்படாத வீடொன்றின் துப்பரவுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மலசலகூடக் குழியிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்