வவு­னி­யா­வில் ஆயு­தங்­களை தேடிய படை­யி­னர்: மீட்­டதோ உக்­கிய பரல்!!

வவு­னியா கூமாங்­கு­ளம் காளி கோயில் வீதி­யில் உள்ள வீட்­டில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தங்­களைக் கண்­ட­றியத் தேடு­தல் நடத்­திய படை­யி­னர், இறு­தி­யில் உக்­கிய பரல் ஒன்­றையே மீட்­டுள்­ள­னர்.

நீதி­மன்ற அனு­ம­தி­யு­டன் இந்­தத் தேடு­தல் நடத்­தப்­பட்­டது. நேற்று பி.ப. 3 மணி­யி­லி­ருந்து, மாலை 6.30 மணி­வரை, பெக்கோ இயந்­தி­ரத்­தின் உத­வி­யு­டன் வீட்டு வளவு முழு­வ­தும் தோண்­டி­னர். இறுதி வரை­யில் எது­வும் சிக்­க­வில்லை. உக்­கிய நிலை­யில் பரல் ஒன்­றையே அவர்­க­ளால் மீட்க முடிந்­தது.

இந்­தக் காணி­யில் 3 ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­ரும் இதே­போன்று தேடு­தல் நடத்­தப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்­தத் தேடு­தல் நட­வ­டிக்கை தொடர்­பாக செய்தி சேக­ரிக்­கச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளை­யும் பாது­காப்­புத் தரப்­பி­னர் அனு­ம­திக்­க­வில்லை.