ரயில்களில் பயணிக்கவிருக்கும் பொதுமக்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்!!

தொடரூந்து இயந்திர பொறியியலாளர்கள் ஒன்றியம் இன்று நள்ளிரவு முதல் நடத்த உத்தேசித்திருந்த போராட்டம், திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்துக்கு தொடரூந்து நேரக்கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள், தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தவுள்ளனர்.

இதுதொடர்பில் இன்று போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்கவுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.இந்தநிலையில் திட்டமிட்டப்படி தங்களது போராட்டம் இடம்பெறும் என்று, தொடரூந்து இயந்திர பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.