வெவ்வேறு நாள்களில் 11 இடங்களில் திருடிய அவர்கள் நேற்றுக்காலை கோவிலில் திருடமுற்பட்ட போதே மாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டது.
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவிலில் நேற்றுத் திருடமுற்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. 45 வயது மதிக்கத்தக்க பெண்ணும் அவருடைய 10 வயது மகனுமே கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கோவிலில் நேற்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னரும் மாலைவரை அங்கு நின்றுள்ளனர்.
மாலை 5 மணியளவில் ஆலய நிர்வாகத்தினர் கதவைத் திறக்க முற்பட்டபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்தனர்.
அந்தநேரம் சந்தேகநபர்கள் இருவரும் கோவிலிலிருந்து வெளியில் சென்றனர். அவர்களிடம் கேட்டபோது தமக்கு அதுபற்றித் தெரியாது என்று கூறியுள்ளனர்.
அவர்களின் பேச்சில் சந்தேகமடைந்த நிர்வாகி பெண்ணின் கைப் பையை வாங்கிப் பார்த்தபோது தற்குள்ளே பல சாவிகளும், பூட்டுகள் உடைக்க பயன்படும் சிறிய ஆயுதங்களும் இருந்துள்ளன.
பொதுமக்கள் ஒன்று கூடினர். விசாரித்தபோது பல இடங்களில் பூட்டுடைத்துத் திருடியுள்ளமை தெரியவந்தது.
கொழும்புத்துறையிலுள்ள அந்தோனியார் கோவில் ,கிளிநொச்சி பிள்ளையார் கோவில், வவுனியா கந்தசாமி கோவில் ,சிதம்பரபுரம் கோவில், மன்னார் வைத்தியசாலைக் கோவில் போன்றனவற்றில் அவர்கள் திருடியுள்ளமை தெரியவந்தது.
வவுனியா கோமரசங் குளத்தடியில் தற்காலிகமாக வசித்து வருகின்றனர் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் நீதின்றில் முற்படுத்தப்படுவர் என்று வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.