யாழ், முல்லைத்தீவில் நாளை மின்தடை!

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை யாழ்.குடாநாட்டில் கோண்டாவில் குமரக் கோட்டம், பூதவராஜ்ர் வீதி, அன்னங்கை, கொடிகாமம் கச்சாய் வீதிப் பிரதேசம், உயகதிர்காமம், வல்லிபுரம், வல்லிபுரம் நீர்ப்பாசனம் ஆகிய பகுதிகளிலும்,

காலை-08 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரம், கள்ளப்பாடு, வண்ணாங்குளம், வட்டுவாகல், கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, உன்னாப்பிலவு, முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.