மலையகத்தில் அதிசயம்! படையெடுக்கும் மக்கள் (படத்தொகுப்பு)

திம்புள்ள – பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைக்குலையில் மூன்று வாழைப் பூக்கள் பூத்துள்ளன.

இப்பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு அதிசயம் நடந்துள்ளது.

பத்தனை குயின்ஸ்பெரி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்திலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

10 – 12 அடி உயரத்திலான இந்த வாழை மரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்வது சிறப்பம்சம்.

இதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடதக்கது.