காரைநகரில் கோலாகல படகுப்போட்டி

மே தினத்தை முன்னிட்டு காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சாம்பலோடை கடற் பிரதேசத்தில் இன்று கட்டு மரச்சவாரி போட்டி மற்றும் படகுச்சவாரி போட்டி இடம்பெற்றது.

கங்கைமதி சனசமூகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் க.பாலச்சந்திரன் ,பிரதேச சபை உறுப்பினர் விஜயராசா சன சமூக நிலைய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்