திடீரென சரிந்து வீழ்ந்தது கருங்காலி முருகன் தேர் (படங்கள்)

காரைநகர் கருங்காலி முருகன் கோயில் தேர் திடீரென சரிந்து விழுந்தது.

வருடாந்த திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெற்றது. இதன் போதே தேர் சரிந்து விழுந்தது என்று தெரிவிக்கப்ட்டது.

இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்த்திருவிழா ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் தேரின் இருப்பிடத்திற்கு வரும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தெய்வக் குற்றம் ஆகிவிடுமோ எனும் அச்சம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.