தவ­றான முடி­வெ­டுத்து மாண­வன் உயி­ரி­ழப்பு – யாழில் சம்பவம்!

தவ­றான முடி­வெ­டுத்து தூக்­கில் தொங்­கிய 15 வயது மாண­வன் மீட்­கப்­பட்டு கோப்­பாய் மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­போ­தும் மாண­வன் உயி­ரி­ழந்து விட்­டார் என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்­பா­ணம் நீர்­வே­லி­யில் நடந்­துள்­ளது. நீர்­வேலி தெற்கு நீர்­வே­லி­யைச் சேர்ந்த பிரா­பா­ர­க­ரன் துபா­ர­க­ரன் (வயது-15) என்ற மாண­வனே உயி­ரி­ழந்­துள்­ளார்.

துபா­ர­க­ர­னின் பெற்­றோர் கொழும்­பில் வசித்து வரு­கின்­ற­னர். துபா­ர­க­ரன் தனது பேத்­தி­யு­டன் நீர்­வே­லி­யில் வாழ்­கி­றார். நீர்­வேலி சோமஸ்­கந்தா பாட­சா­லை­யில் அவன் ஜி.சி.ஈ சாதா­ரண தரத்­தில் கல்வி கற்­கி­றார். துடிப்­பும், விளை­யாட்­டில் அதிக ஆர்­வ­மும் கொண்­ட­வர்.

நேற்­று­முன்­தி­னம் துவா­ர­க­னின் தாய் அவ­னு­டன் தொடர்பு கொண்­டுள்­ளார். துபா­ர­க­ரனை சாதா­ரண தரப் பரீட்­சைக்­குத் தயார்ப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் தான் யாழ்ப்­பா­ணம் வரு­வுள்­ள­தா­க­வும் கூறி­யுள்­ளார். இந்த நிலை­யி­லேயே துபா­ர­க­ரன் தவ­றான முடி­வெ­டுத்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இறப்­புத் தொடர்­பாக விசா­ர­ணையை யாழ்ப்­பா­ணம் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் மேற்­கொண்­டார்.