வல்லை நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு

வல்லை நாகதம்பிரான் ஆலயத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகபாம்புக்கு பால் ஊற்றி காப்பாற்றப்பட்டுள்ளது.ஆலய வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நாகபாம்பு காயமடைந்துள்ளது.

இதனையடுத்து பாம்புக்கு பால் உற்றி வழிபாடு செய்ததன் மூலம் அதன் மயக்கத்தை அங்கிருந்தவர்கள் போக்கியுள்ளனர்.வீதியை கடக்க முயன்ற நாகபாம்பு மோட்டார் சைக்கிளுக்குள் சிக்கி காயமடைந்தது. அதைக் கண்டவர்கள் பாம்மை நாகதம்பிரான் ஆலயத்தில் வைத்து, பாலூற்றி மயக்கத்தைப் போக்கினர். பின்னர் அந்தப் பாம்பை வழிபட்டனர். பாம்பு மயக்கம் நீங்கி அங்கிருந்து அகன்று சென்றுள்ளது.