100 கோடி ரூபா செலவில் மீள் புனரமைப்பு செய்யப்படப் போகும் இலங்கைப் பாராளுமன்றம்!!

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியானது 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 100 கோடிரூபா செலவில் மறுசீரமைப்புச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய அமைச்சரவைப் பத்திரமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுசெயலர் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் கூ​ரை, வாயில் கதவுகள், மலசல கூடம், நாடாளுமன்ற சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் என்பன மறுசீரமைப்புச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.