இரவு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் (வைரல் வீடியோ)

மகாராஷ்டிராவின் பந்த்ரா பகுதியில் இரவு நேரத்தில், சிலரோடு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவின் பந்த்ரா பகுதியில் மெட்ரோ பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சென்ற சச்சின், தனது காரில் இருந்து இறங்கி, அந்த ஊழியர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடியதாக தெரியவருகிறது.
இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் வியப்படைந்துள்ளனர். சற்று நேரம் கிரிக்கெட் விளையாடி விட்டு, அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு சச்சின் விடைபெற்று சென்றுள்ளார்.