திரு­மணம் செய்­ய­வில்லை என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக 7 வரு­டங்­க­ளாக சட்ட ரீதி­யாக போராடும் பாகிஸ்­தா­னிய நடிகை

பாகிஸ்­தானைச் சேர்ந்த நடி­கை­யொ­ருவர் தான் திரு­மணம் செய்­ய­வில்லை என நிரூ­பிப்­ப­தற்­காக 7 வரு­டங்­க­ளாக சட்­ட­ரீ­தி­யாக போராடி வரு­கிறார்.

லொலிவூட் என அழைக்­கப்­படும் பாகிஸ்­தா­னிய திரைப்­ப­டத்­து­றையில் பிர­ப­ல­மா­னவர் நடிகை மீரா. 40 வய­தான இவரின் உண்­மை­யான பெயர் இர்­திஸா ரூபாப் ஆகும்.

இந்­தி­யாவின் பொலிவூட் திரைப்­ப­டங்­க­ளிலும் இவர் நடித்­துள்ளார். அர­சி­யலில் ஈடு­படும் ஆர்­வத்­தையும் முன்னர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தவர் நடிகை மீரா.

வணிக ரீதியில் வெற்­றி­பெற்ற பல படங்­களில் நடித்த நடிகை மீரா பல விரு­து­க­ளையும் வென்­றவர்.

இந்­நி­லை­யில், தான் நடிகை மீராவின் கணவர் என வர்த்­தகர் கூற ஆரம்­பித்ததால் அதை நிரா­க­ரித்­து, சட்ட நட­வ­டிக்­கை­களில் மீரா ஈடு­பட்­டுள்ளார்.

பாகிஸ்­தானின் பைஸ­லாபாத் நகரைச் சேர்ந்த வர்த்­த­க­ரான அதீக் உர் ரெஹ்மான் எனும் வர்த்­த­கரே தான் மீராவின் கணவர் என்­கிறார்.

தனக்கும் நடிகை மீரா­வுக்கும் 2007 ஆம் ஆண்டு திரு­மணம் நடை­பெற்­ற­தாக 2009 ஆம் ஆண்டு அதீக் உர் ரெஹ்மான் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறினார்.

தனது கணவர் என தன்னை பகி­ரங்­க­மாக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு மீரா தயங்­கு­வதாகவும், தனது ரசி­கர்­க­ளிடம் தான் இன்னும் திரு­ம­ண­மா­கா­தவர் எனக் கூறி­வ­ரு­வ­தா­கவும் அதீக் உர் ரெஹ்மான் கூறினார்.

தனக்கும் நடிகை மீரா­வுக்கும் திரு­மணம் நடை­பெற்­றதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக திரு­மணச் சான்­றி­த­ழையும் அதீக் உர் ரெஹ்மான் சமர்ப்­பித்­த­து­டன், மீரா­வுக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் பல வழக்­கு­க­ளையும் தாக்கல் செய்தார்.

நடிகை மீரா தனது மனைவி என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக மீராவை மருத்­தவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த வேண்­டும், தன்னை விவா­க­ரத்துச் செய்­யாமல் வேறு யாரையும் திரு­மணம் செய்ய மீராவை அனு­ம­திக்­கக்­
கூ­டா­து, தனது வீடொன்­றி­லேயே மீரா வசிக்க வேண்­டும், அவரை வெளி­நாடு செல்ல அனு­ம­திக்கக் கூ­டாது எனவும் அதீக் உர் ரெஹ்மான் கோரினார்.

மீராவை கன்­னித்­தன்மை சோத­னைக்­குட்­ப­டுத்த வேண்டும் எனவும் அதீக் உர் ரெஹ்மான் கோரினார். ஆனால், லாகூர் மேல் நீதி­மன்றம் அக்­ கோ­ரிக்­கையை நிரா­க­ரித்­த­து. பொது­வா­க, பாலியல் வல்­லு­றவு போன்ற வழக்­கு­க­ளி­லேயே இத்­த­கைய சோதனை நடத்­தப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

தான், அதீக் உர் ரெஹ்­மானின் மனை­வி­யல்ல எனவும் தான் எவ­ரையும் திரு­மணம் செய்­ய­வில்லை எனவும் கூறும் மீரா, அதீக் உர் ரெஹ்­மா­னுக்கு எதி­ராக 2010 ஆம் ஆண்டு வழக்­கொன்றை தாக்கல் செய்தார்.

அதீக் உர் ரெஹ்மான் பிர­பல்ய­ம­டை­வ­தற்கு அவா கொண்­டவர் என மீரா கூறு­கிறார். நிகழ்ச்சி ஊக்­கு­விப்­பா­ள­ரான ரெஹ்­மான், நண்பர் ஒருவர் மூலம் தனக்கு அறி­மு­க­மா­ன­தா­க­வும், சில இசை நிகழ்ச்­சி­கள், சுற்­று­லாக்­களில் அவ­ருடன் இணைந்து செயற்­பட்­ட­தா­கவும் மீரா தெரி­வித்­துள்ளார்.


‘அவர் போலி புகைப்­ப­டங்­களைக் காட்­டி என்னைத் திரு­மணம் செய்­த­தாகக் கூறு­கிறார். என்னை தனது மனைவி என அழைக்க எப்­படி அனு­ம­திக்க முடியும்?’ என கேள்­வி­யெ­ழுப்­பு­கிறார் மீரா.

‘நான் ஒரு நட்­சத்­தி­ரம், அவ்­வ­ளவு சாதா­ர­ண­மான வகையில் எனது திரு­மணம் நடைபெற மாட்­டாது. ஒரு அறை க்­குள்ளா நான் திரு­மணம் செய்­தி­ருப்பேன்?’ என்­கி­றார் அவர்.

நடிகை மீரா இவ்­வாறு கூறும் நிலை­யில், அவரும் அதீக் உர் ரெஹ்­மானும் கடற்­க­ரையில் நெருக்­க­மாக காணப்­படும் புகைப்­ப­டங்­களும் வெளி­யா­கி­யுள்­ளன.

இந்த வழக்கு தாமத­ம­டை­வதன் கார­ண­மாக தான் திரு­மணம் செய்­து­கொள்­வ­தற்கு தடங்கல் ஏற்­பட்­டுள்­ள­தாக மீரா தெரி­வித்தார்.

இந்­நி­லை­யில், வேறு எவ­ரையும் மீரா திரு­மணம் செய்­து­கொள்ளக் கூடாது எனும் ரெஹ்­மானின் கோரிக்கையை அண்மையில் லாகூர் நீதிமன்றமொன்று நிராகரித்தது.

ரெஹ்மான் சமர்ப்பித்த திருமண சான்றிதழ் உண்மையானதா இல்லையா என இன்னும் தீர்மானிக்கப்பட வில்லை என நீதிபதி பாபர் நதீம் தெரிவித்தார்.

எனினும், மீரா திருமணமானவர் என அதீக் உர் ரெஹ்மான் நிரூபித்தால் சட்ட ரீதியான பின்விளைவுகளை மீரா எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.