கையில் பணம் தங்கவில்லையா……? இலகுவில் எவருக்கும் தெரியாத எளிய பரிகாரங்கள்…….!! இதைச் செய்து பாருங்கள்…. அப்புறம் நடப்பதை…….!!

எல்லாருக்குமே ஒருகட்டத்தில் பணக்கஷ்டம் மென்னியைப் பிடித்துத் திருகிவிடும் நிலை ஏற்படுவது சகஜமே.

இப்படிப்பட்ட நேரங்களில் சில பரிகார காரியங்களைச் செய்வதன்மூலம் செல்வத்தை தக்கவைக்கலாம். நிம்மதியையும் திரும்பப்பெறலாம் என இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன.

நிம்மதியையும் செல்வத்தையும் பெருக்கச் செய்யும் எளிய பரிகாரங்கள் இதோ

1) சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சைப் பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.

2) வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.

3) உப்பு, சர்க்கரை, கடலைப்பருப்பு, சுத்தமான நெய், கோதுமை மாவு, முடிந்த அளவு கோயில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.

4) காய்ச்சாத பசும்பாலை ஆலமரத்துக்கு 7 நாட்கள் ஊற்றி வரவும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு பால் ஊற்றினால் சிறப்பு.

5) குளிக்கும்போது கெட்டித் தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும் 7 நாட்கள் மட்டும்.