இலங்கையில் சம்பவம்; பெண்ணொருவர் கொடூரமாக தாக்கி கொலை!

மீட்டியாகொட – நுந்தல பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

72 வயதான பெண்ணொருவரே நேற்று(15) அதிகாலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உறவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை அவர் வாழ்ந்து வந்த வீட்டில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை(15) 1.30 மணியளவில் நபரொருவர் மண்வெட்டியுடன் குறித்த பெண்ணின் வீட்டிற்குள் நுழையும் விதம் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

இதன்படி மேற்கொண்ட விசாரணைக்கு அமைய மீட்டியாகொட பிரதேசத்தில் வைத்து இன்றைய தினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகிறது.