மண்வெட்டித் தாக்குதல் ; குடும்பஸ்தர் பலி!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட கைகலப்பில் 32 வயதுடைய குடும்பஸ்த்தார் மண் வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 5 வயதுடைய பெண் பிள்ளை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் வாகரை கட்டுமுறிவில் இடம்பெற்றுள்ளது.

இராசைய்யா சவுந்தராஜன் வயது 32 என்பவரே சம்பவத்தில் மரணமடைந்துள்ளார். காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் காணப்பட்ட இருவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாகி அது கோஸ்டி மோதலாக மாறியது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மரணமடைந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.