தென் ஆப்பிரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய குடும்பம்!

தென் ஆப்பிரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய குடும்பம்!

தென் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் 5 பேர் பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த அஸீஸ் மஞ்ச்ரா என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் (Pietermaritzburg) பீட்டர்மாரிட்ஸ் பர்ஃக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குடியேறினார்.

கடந்த புதன் கிழமை இரவு இவரது வீட்டின் மீது மர்மநபர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த அசம்பாவிதத்தில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட ஐந்து பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை இன்னும் கண்டறியப்படவில்லை.
ஆனால் இவர்கள் கொலை செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக தான் அந்த வீட்டிற்கு குடிபெயந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.