வவுனியாவில் ரயிலில் மோதுண்டு 17வயதுடைய பாடசாலை மாணவன் பலி!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (04.04.2018) அதிகாலை 3.30மணியளில் ரயிலில் மோதுண்டு 17வயதுடைய பாடசாலை மாணவணோருவன் உயிரிழந்துள்ளார்.

கற்குழியில் வசித்து வரும் குறித்த பாடசாலை மாணவன் ( சுபலோசன்) நேற்றையதினம் குடும்பதாருடன் சிறு கருத்துமுரன்பாட்டில் ஈடுபட்டு வீட்டை வீட்டு வெளியேறி சென்றுள்ளார்.

பின்னர் வவுனியா தேக்கவத்தை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இவர் சில தினங்களான தற்கொலைக்கு முயற்சித்தாக இவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.