காரைநகர்.. நடராஜா பாக்கியம்..! (மரணஅறிவித்தல்)

காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் இல -184/14A, குருநாதர் ஒழுங்கை, பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாக்கியம் (28.03.2018) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளையின் அன்பு மகளும்,

நடராஜாவின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

குகராஜ்,ஆனந்தராஜ்,கோகுலராஜ்,சண்முகராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்

மோகராணியின் அன்பு சகோதரியும், சிவபாதம்(கனடா) காலஞ்சென்ற பரஞ்சோதி, சவுந்தராம்பிள்ளை, மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துணியும்,

ஈஸ்வரி,தவமணி,கணேசப்பிள்ளை ஆகியோரின் சகலியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 29.03.2018 காலை 9மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன் மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
பிள்ளைகள்