முதன்முறையாக செய்தி தொகுப்பாளரான திருநங்கை

பாகிஸ்தானின் முதன்முறையாக செய்தி தொகுப்பாளராக திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சியில் திருநங்கையான மார்வியா மாலிக் பணியாற்றி வருகிறார். இவர் நாட்டின் முதல் திருநங்கை செய்தி தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மார்வியா முதன்முதலாக மார்ச் 23ஆம் திகதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்தார். இது குறித்த தகவல் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டவுடன் வேகமாக பரவியது.

இது குறித்து பேசிய மார்வியா, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் மூன்றாவது பாலினமான எங்கள் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என கூறினார்.