யாழ் நாவற்குழியில் வாகன விபத்து குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் கடற்படை வீரர் உள்ளிட்ட இருவர் கைது

யாழ் நாவற்குழி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் கடற்படை வீரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ் நாவற்குரி பூநகரி வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நாவாந்துறையைச்சேர்ந்த அந்தோனி கொன்சலஸ் எனும் 36 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

Image result for யாழ் நாவற்குழியில் வாகன விபத்து

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பவுசருடன் கிளிநொச்சியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த குடும்பஸ்தர் மோதி நிலை தடுமாறிய நிலையில் தொடர்ந்து பின்னால் சென்ற கார் ஒன்றும் அவர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது

கடற்படையினக்கு சொந்தமான குறித்த தண்ணீர் பவுசரின் சாரதியான கடற்படை ஒருவரும் மற்றைய காரின் சாரதியும் யாழ் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

தண்ணீர் பவுசர் எவ்வித சமிக்ஞைகளும் இன்றி நடு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்