ஆனந்த சுதாகரனை விடுக்க கண்டி அஸகிரியபீட மகாநாயக்க தேரரிடம் நேற்று மனு கையளிப்பு

அரசியல் கைதியான கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரனை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிவன் பவுண்டேசன் நிறுவுநர் வேலாயுதம் கணேஸ்வரன் கண்டி அஸகிரியபீட மகாநாயக்க தேரரிடம் நேற்று மனு ஒன்றை கையளித்துள்ளார்.

சிறைக்கைதியாகி ஆனந்த சுதாகரனனின் மனைவி நோய்வாய்ப்பட்ட நிலையில் அண்மையில் மரணமடைந்தார்.இதனால் அவருடைய இரண்டு பிள்ளைகளும் பாதுகாப்பற்று அநாதைகளாக உள்ளனர்.
அவர்களின் நலன் கருதி ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதிக்கு ரிந்துரை செய்யுமாறு அந்த மனுவில் தெரிவிக்கநப்பட்டது.
இதனை ஆராய்ந்த தேரர் அவரின் விடுதலைக்கு வேண்டிய நடவ டிக்கை எடுப்பதாக வேலாயுதம் கணேஸ்வரனிம் உறுதியளித்தார்.