சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியில் வியாபார நிலையத்தை உடைத்து திருட்டு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தை உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடை உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை இரவு :11:00 மணியளவில் வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுவிட்டு, காலை 6:00 மணியளவில் கடையைத்திறப்பதற்குச் சென்றபோது கடை உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டப்பட்டது.