யாழில் இன்று கருணைமனு மற்றும் கையெழுத்து சேகரிப்பு!

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான கையெழுத்துப் போராட்டமொன்று இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் சமூக முன்னேற்ற நிறுவனம் மற்றும் தமிழ் இளைஞர்கள் சமூகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் குறித்த கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் குறித்த கருணை மனுக்களில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் நலனைக் கருத்திற்கொண்டு விடுதலை செய்யுமாறு குறித்த கருணைமனுவில் கோரப்பட்டுள்ளதுடன், இதன்போது பொதுமக்களி;டம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இக்கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இச்செயற்பாட்டிற்கு பொது அமைப்புக்கள் பலவும் தமது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.