பாடசாலை சுற்றுலா சென்ற மாணவர் ரம்பொட நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழப்பு!

பாடசாலை சுற்றுலா சென்ற மாணவர் ஒருவர் நுவரெலியா ரம்பொட நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 10.30 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தம்புளை பகுதியிலுள்ள தேசிய பாடசாலையொன்றில் தரம் 12 இல் கல்வி கற்கும் 18 வயதான மாணவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.